Friday, November 22, 2013

தெரியாதோ நோக்கு?




- ஊசி மிளகாய்




புதுக்கோட்டை - திருச்சி இடையில் உள்ள மாத்தூர் காவல் நிலையத்தில், அடிக்கடி அப்பகுதி யில் கொலை, கொள்ளைகள் நடைபெறுவதைத் தடுக்க அங்குள்ள காவல் துறை அதிகாரிகளான பிரகஸ்பதிகள் பார்ப்பன குருக்களைஅழைத்து, யாகம் செய்துள்ளதாக, இம்மாதம் 15ஆம் தேதி ஏடுகளில் வந்துள்ள செய்தியைவிட, நம் அரசு, மதச்சார்பின்மையை காப்பாற்றுவதிலும், அரசியல் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பான்மையைக் குடிமக்களிடம் வளர்க்க வேண்டிய அரிய பணியையும்விட அற்புதமான(?) செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

 






திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களுக்குத் திருடர் பயமோ, கொலை, கொள்ளை பீதியோ இனி ஏற்படவே ஏற்படாது; இது சத்தியம்! இது சத்தியம்!
பலே பலே, இவாளுக்கு தனியே பாராட்டு விழா நடத்தி முதல் அமைச்சரும், தமிழக அரசும் பண முடிப்பு அளித்து யாகாதிபதி. காவல் சுவாமிகள் பட்டங் களையும் வழங்கலாம்; குற்றத் தடுப்புக்கு இவ்வளவு எளிய வழியைக் கண்டுபிடித்த இவாளுக்கு டபுள் புரோமோஷன் அல்லவா அரசு வழங்க வேண்டும்அடடா என்னே பக்தி! என்னே பக்தி!! மற்ற மாவட்டங்களிலும் இதையே கடைப்பிடிக்கலாம்; அவசர அரசு ஆணையையும் பிறப்பிக்கலாம்.
இனி டி.ஜி.பி. அய்.ஜி. பதவிகளுக்குப் பதிலாக, யாகாதிபதிகள், பர்ண சாலை பகவத் குஞ்சுகள் என்றெல்லாம் கூறி, எல்லா காவல் நிலையங்களையும், யாக சாலைகளாகவும், பர்ண சாலைகளாகவும், மாற்றி நித்தம் நித்தம் பூஜை, யாகம், நடத்தலாம்! நரபலி கூட கொடுத்தால் மேலும் யாகங்களின் பலன் குயிக்கா (ணுரஉம) கிட்டாதோ!
அப்புறம் பூணூல் குருஜிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட டிமாண்டோ டிமாண்டு ஏற்பட்டு விடும்!
அந்த யாகப் புகை மண்டலமே நல்ல ஆரோக்கிய சுற்றுச் சூழலை நன்னா பாதுகாக்கும்!
நம்ம பெரியவா கண்டுபிடிச்ச யாகமுன்னா மற்ற நாட்டுக்காராளெல்லாம்கூட வருவாளே?
ஏற்கெனவே நம் அய்யர் வாள்களை ராஜபக்சே அழைச் சுண்டு போய் யாகங்கள் நடத்தியல்லவா அந்த டெரரிஸ்ட் டுகளான புலிகளை அழிச் சாள் - தெரியாதோ நோக்கு?
இதைக்கேட்ட அந்த ஒபாமாகூட இந்த அல்கொய்தா தொல்லையை ஒழிக்க யாகத்தையே செய்யணும்னு சொல்லிண்டிருக்காராம்; நம்ம அடுத்தாத்து அம்புஜத்தின் ஒண்ணுவிட்ட சகலை யின் சம்பந்தியின் மருமா சொன்னார்! ஆமாம் ஏற்கனவே தீபாவளி கொண்டாடச் சொல்லி சாதிச்சுட்டோமே!
அவாளுக்கு ஸ்பெஷல் விசா கூட அதனால வருமாம்!
ஹூம் - நேக்குக் கிடைக்காத பாக்கியம் அவாளுக்கு அடிச்சுது யோகம்! ஒயிட் அவுஸ்போய் ஜாம் ஜாம்ன்னு உட்கார்ந்துண்டு யாகம் என்று40 நாள் பண்ணி ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிட யோசனையாம்!
பலே பலே! நம்ம வேத விற்பன சிகாமணி  யாக சாலை யோகானந்த குருக்கள்தான் இனிமே ஒயிட்அவுஸ் அதிபர் கொஞ்ச  நாளைக்குன்னு சொல்லு!
அதுசரி, இந்த மாத்தூர் போலீஸ்காரர் மேலே தி.. கறுப்புச் சட்டைக்காரனுங்க, பி.அய்.எல் அது தானே பொது நல வழக்கு அது இதுன்னு எதுவும் போட்டு, ஏதாவது ஏடா கூடாமா தீர்ப்பு வாங்கிடப் போறா?
அதையும் நன்னா விசாரியுங்கோஇப்படி சிறீரங்கத்திலே ஒரு உரையாடல் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாதே!

No comments:

Post a Comment