முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
(உலக வரலாற்றில் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய - ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது. பத்தாயிரம் பேர் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்- மூவாயிரம் பேர் கைதானார்கள். அந்த நாளையொட்டி (நவம்பர் 26) இந்தக் கட்டுரை இங்கே.)
26-11-1957 இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலே எந்த அரசியல், சமூக, சமய சீர்திருத்தப் போராட்டத் தலைவனும் மேற்கொண் டிராத - உயர்ந்தது - புனிதமானது என்று கதைத்து வந்த இந்திய அரசமைப்புச் சட்ட நகலை எரிப்போம் வாரீர் என்று தன் மானத் தலைவர் தந்தை பெரியார் அறிவு ஆசான் அறைகூவல் விடுத்து மேற் கொண்ட அறப்போர் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு சரித்திர வரலாறு.
17-9-1968 ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் அறிவாசான் பெரியார் விடுதலை நாளிதழ் வெளியிட்ட அவர்தம் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் எழுதுகையில், எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்கள்) ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரஸில் கூப்பிட்ட உடன் சேர்ந் தேன். நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்.
ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) எனும் பார்ப்பனரல்லா கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்காகத்தான். ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சியின் தலைமையை ஏற்றவுடன் அக்கட்சியின் கொள்கையாக இம்மூன் றையுமே ஏற்படுத்தி விட்டு அரசியலில் எலெக்ஷனில் (தேர்தல்) நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை, பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். காங் கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப் பட்ட போதும், பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியதும் இதற்காகத்தான்.
வெள்ளையன் போனபின்பு 1957இல் நடந்த தேர்தலின் போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்த போது என் கழகத்தில் இருந்து ஒரு வரைக் கூட நிறுத்தாமல் கம்யூனிஸ்டு களுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்துக் காங்கிரசைத் தோற் கடித்ததும் இதற்கு (என்னுடைய மேற் கண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.
இப்படி வாழ்நாள் முழுமையிலும் 93 ஆண்டுகளும் சாதிப் பேய்க்கு எதிரா கவே, பகுத்தறிவு தழைக்கவே பாடுபட்ட தலைவர் இந்தியாவில் எங்குத் தேடினா லும் பெரியார் அய்யா ஒருவர் தவிர வேறு ஒருவரைக் காண இயலாது. அவருடைய போராட்டங்களின் உச்ச கட்டம்தான் அரசியல் சட்ட எரிப்பு. இது ஏன்?
திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமா கின்றன. இது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச் சாரி முதல் எல்லோரும் எதிரிகள். நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியு மென்று எண்ணினோம். பிராமணாள் என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக் கூடாது; பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்று திட்டங்களை வைத்து முதல் திட்டத் திற்குக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650 பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள்.
இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். ராசகோபாலாச்சாரி சொன்னார். நாங்கள் எப்போது சொன்னோம். ஜாதி ஒழியவேண்டுமென்று எங்கே சொன் னோம்? என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு வனுக்கும் அவனுடைய ஜாதியை, மதத் தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கின் றான். ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம். அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்திரவாதம் அளித்திருக்கிறது.
இந்தச் சட்டம் இருக்கிறவரை ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் வரை,நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும் என்று கேள்வி கேட்ட அறிவு ஆசான், நம்முடைய சூத்திரத்தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா? என்று வினா எழுப்பியதோடு நின்றுவிடவில்லை.
8-10-1957 இல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் - தம் சொற்பொழிவில் முதல் போராட்ட அணுகுண்டை ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க அரசமைப் புச் சட்டத்தை, ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன் என்று அறிவித்த அவர், ஜாதி ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக் கிக் கொள்ளுங்கள்.
இளைஞர்களா கியிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்து போட்டு அனுப்புங்கள் என்றவர். ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மா யிருப்பது? உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங் கள் என்றார்.
இந்த முடிவுக்கு - அரசியலமைப்புச் சட்டத்தையே கொளுத்தும் முடிவிற்கு அவர் சென்றது, வந்தது ஏன்? ஜாதி ஒழிப்புக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவுக்குச் செய்தாய்விட்டது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லோ ரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஒத்துக் கொண்டவர்களும் வெளிப்படை யாகச் சொல்ல வாய்ப்பில்லை என்றாலும், ஜாதியொழிப்பை எதிர்க்க ஆளில்லை. 100-க்கு 97 பேரைப் பற்றிய காரியமாக உள்ளதால் ஜாதி ஒழியவேண்டுமென் பதற்கு எதிர்ப்புக் கிடையாது.
ஜாதி
ஒழியவேண்டியது நியாயந்தான் என்று தெரிந்தாலும் வெளியே
வருவ தில்லை. சட்டசபைக்குப் போக
இடைஞ் சல் வந்துவிடுமோ என்று
பயப்படுகிறான். அதனாலேயே என்னவோ 3000 ஆண்டுகளாக இருக்கும் இழிவு இன்னும் கொஞ்ச
நாள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிறான்! ஆனால் ஜாதி ஒழியவேண்டும்
என்பதை எதிர்ப்பதற்கு ஆள் கிடையாது. ஏன்?
அது செல் வாக்குப் பெற்றுவிட்டது.
அது ஒழியக் கூடாது என்று
சொன்னாலும் சட்ட சபைக்கும் போகமுடியாத
நிலை வந்துவிட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து
போராட்ட அறிவிப்பைச் செய்தார். இதனை 14-10-1957 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில்
பேசு கையில் தெளிவுபடுத்தினார். வண்ணாரப்
பேட்டை சொற்பொழிவின் முடிவில் அய்யா நெடுங்காலமாக இருந்து
வரும் மானக்கேடு போகவேண்டும். உன் அப்பன், பாட்டன்
சூத்திரன். நீயும் சூத்திரன். ஆனால்
உன் குழந்தைகள் சூத்திரர்களாக ஆகக்கூடாது. எதையும் இரகசியமாகச் செய்யமாட்டேன்.
கையெப்பம் வாங்குவேன். மளமளவென்று போட்டுத் தரவேண்டும். முதலில் அரசமைப்புச் சட்டத்தைக்
கொளுத்து வேன். அதுவும் எப்படிக்
கொளுத்துவேன் என்றால் சும்மா கொளுத்தமாட்டேன்.
முதலில் இராட்டினத்தை உடைத்துப் போட்டு, பெட்ரோலோ மண்ணெண்
ணையோ ஊற்றிக் கொளுத்துவேன். அந்த
நெருப்பில் இந்த அரசமைப்புச் சட்டத்தையும்
போட்டு வேகவைப்பேன்! ஆகவே தோழர்களே! நீங்கள்
நான் சொல்வதைக் கேட்டு உங்களுக்குச் சரியென்று
பட்டால் ஆதரவு தர வேண்டும்
என்று ஆதரவுக் கரம் நீட்டச்
சொன்னார்.
ஆறுமாதங்களாகச்
சென்னையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில்
700 பேர் வரை, 1957 இல் சிறை சென்றனர்.
ஆயிரம் பேருக்குப் பிறகு வேறு வழிகளைக்
கையாளுவோம் என்று முன்னரே கூறியிருந்தார்.
ஆனால் அரசு அந்த அளவிற்குப்
பின்னும் கவனிக் கவோ, ஓர்
அறிக்கையும் தரவோ இல்லை.
ஜாதிக்குப்
பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருப்பதையும், ஜாதியை ஒழிக்கச் சட்டத்தில்
இடமில்லை என்பதையும் மக்களுக்குத் தம்முடைய கருத்துகளைத் தெரிவிப்பதோடு, அரசின் கவனத்தையும் ஈர்க்க
வேண்டியவர்களாக இருப்பதை உணர்ந்தால், ஜாதியை நிலைக்க வைக்க,
ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள அரசு பாதுகாப்பு
அளிக்கிறது எனத் தெளிவாகப் புரிந்து
கொண்டால், இன்னமும் கைகட்டிக் கொண்டு சும்மாயிருந்தால் ஜாதித்
தீயை அணைக்க முடியாது என்பது
தெளிவாகியது.
மக்களைப்
பொறுத்தமட்டில் ஜாதியி னுடைய இழிவை
உணர்வதில்லை என்பதோடு ஏதோ பகவான் செயல்,
பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டனர்.
எப்போது சமயம், கடவுள் ஆகியவற்றில்
நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போ
திருந்தே இந்த இழிவை உணராத
நிலைக்கு வந்துவிட்டார்கள். இவ்வாறு மக்கள் பிறவித்
தொழிலாளர்களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும்
இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்கப்
பெரியார் முயன்றபோது முயற்சி போதிய பயனளிக்காததற்குக்
காரணம் சட்டம் முறுக்கேறி நிற்பதுதான்
என்பதை 23-10-1957-இல் நெல்லை மாவட்டம்
ஏரலில் பேசுகையில் அடுத்துக் கூறி யிருக்கக் காண்கிறோம்.
No comments:
Post a Comment