உலகில்
தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத்
தலைவர் தந்தை பெரியார்
அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது
என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை
அப்படியே வெளியிட்டுள்ளனர்.
கடவுள் மறுப்பு
தெய்வங்களை
நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும்.
(பக்கம் 73)
புனிதம்
தண்ணீரைத்
தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய
உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)
மனிதன்
மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ
அம்மணமாக அலைவதாலோ, தலையை
மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள்
செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.
ஆன்மா மறுப்பு
உடல்
ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே
ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)
உடலின்
தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது
மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)
சுவர்க்கம் - நரகம்
நீருள்
நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில்
சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)
பிரார்த்தனை
பிரார்த்தனை
செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது.
தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க
வேண்டாம். (பக்கம் 233)
பொது உடைமை
செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம்
No comments:
Post a Comment