Friday, August 15, 2014

மரபணு பயிறும் - விளைவுகளும்


மரபணு பயிர் -க்கு மோடி அரசு  அனுமதி அளித்திருக்கிறது!!

முதலில் ஒரு விவசாயின் மகன் என்ற அடிபடையில் எனது  கடுமையாக  கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஏதோ இந்த பிரச்சனை விவசாயிகள் சார்ந்தது என்று மக்கள் ஒதுங்கி விட முடியாது , ஏன் என்றால் நீங்கள் தான் நுகர்வோர்கள்.

மரபணு பயிரிடம் விவசாயி தொடங்கி , அதை  உட்கொள்ளும் நுகர்வோர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான ஒவ்வாமைகளை  எற்படுத்தும்.அதில் சிலவற்றை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன :

பிலிப்பைன்ஸ் தீவுகளில் சிடியோ கல்லாங்க் என்னும் கிராமத்தில் அரசு ஆதரவுடன் பி.டி.மக்காச் சோளம் விதைக்கப்பட்டது. பயிரின் பூக்கும் பருவத்திலேயே அதன் பாதிப்புத் தெரிந்தது. வயலில் வேலை செய்தவர்களுக்கும் அருகில் வசித்தவர்களுக்கும் காய்ச்சலும், முக வீக்கமும், மூச்சு திணறலும், இனம் தெரியாத அழுத்தமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, பி.டி.மரபணு உருவாக்கும் நஞ்சை எதிர்க்கும் ராசாயனங்கள் இரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே நிலைமை இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நிர்மல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் ஏற்பட்டது. அதிக புரதம் தரும் பி.டி. சோயாவை பிரேசில் நாட்டில் உருவாக்கினர். இதனைப் பயன்படுத்தும்போது, வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, வலவீனம், தலைவலி போன்ற ஒவ்வாமை உண்டானதால் அவை உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.

தொடர்ந்து மரபணு மாற்று உணவை உட்கொண்டு வந்தால் சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) என்ற நோய் உருவாகும். இதனால் சிவப்பு அணுக்கள் வடிம் மாற்றம் அடைந்து, சிறிய ரத்தக் குழாய்களுக்குள் நுழைய முடியவில்லை என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.

அமெரிக்காவில், பேராசிரியர் பிரைன் டோக்கர், பி.டி. மரபணு தொழில்நுட்பத்தில் விளைந்த உருளைக் கிழங்குகளை உட்கொண்ட எலிகளுக்கு சிறுகுடல் செல்கள் சிதைந்து போயிருப்பதையும், செரிமான உணவுகளை உறிஞ்சும் உறிஞ்சிகள் அழுகிப் போய் இருப்பதையும் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார்.





உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கையின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச் சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

எனவே மக்கள் அனைவரும் மரபணு பயிரை அனுமதிக்கும் மத்திய  அரசுக்கு  எதிராக கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment