Friday, November 23, 2012

மத்தியப் பல்கலைக் கழகங்கள்


புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஓடி விட்டன. என்றாலும் இதைப் பல்கலைக் கழகத்தின் சாதனை என்று சொல்லும்படியாக பெரிதாக எதுவும் இல்லை.

புதுவையையோ, தமிழ் நாட்டையோ, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர்கூட இதுவரை துணைவேந்தராக வந்ததில்லை. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் பிற மாநில ஆதிக்கம்தான் ஆங்கே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் பெரும்பாலும் வாழக் கூடிய மாநிலத்தில்தான் இந்த பல்கலைக் கழகம் இருக்கிறதா என்று அய்யப்படும் அளவுக்கு வடமாநில ஆதிக்கம்!
நடப்பு அய்ந்தாண்டுத் திட்டத்தில் புதுவைப் பல்கலைக் கழகத்திற்கென்று ரூபாய் 900 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந் துள்ளன.

ஆனால் நிருவாகம் என்ன செய்தது?  கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
2012-2013ஆம் ஆண்டுக்கு முது அறிவியல் பாடத்துக்கு ரூ.14,500 முனைவர் பட்டத்துக்கு ரூ.29,000 என்று கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
ஆசிரியர்கள் நியமனம் என்பதெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தாம். குறிப்பாக புவி அறிவியல் துறையில் கடைசியாக நியமிக்கப்பட்டவர் தமிழர் 1994 ஆம் ஆண்டுதான். அவருக்குப் பிறகு 18 ஆண்டு காலமாக எந்தத் தமிழரும் நியமனம் செய்யப்படவில்லை.

இந்தக் கால கட்டத்தில் ஆறு முறை தேர்வுக் குழு (Selection Board)  நடைபெற்றுள்ளது. 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பரிதாபம் என்னவென்றால் இந்த12 பேர்களில் ஒருவர்கூட புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவரோ, தமிழ் மொழி பயின்றவரோ கிடையாது.
மத்தியப் பல்கலைக் கழகம் என்று சொன்னாலே அது ஆரிய ஆதிக்கபுரி என்று சொல்லும் நிலைதான்! இவ்வளவுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் நிலம், நீர், மின்சாரமெல்லாம் கொடுத்து உதவுகிறது. இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கால் பதித்தவுடன் உள்ளூர் மக்களைப் புறக்கணிக்கும் நிலைதான். இடஒதுக்கீட்டினை முறையாக செயல்படுத் துவதும் கிடையாது.

திருவாரூரில் அப்படிதான் மத்தியப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. தேவையான நிலத்தை தமிழ்நாடு அரசுதான் அளித்தது. விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது - இடஒதுக்கீடு எல்லாம் அளிக்க முடியாது என்று சொன்னாரே!

திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொதுப் பேரவைக்கு (செனட்டுக்கு) நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 30 பேர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 17 பேர்கள். இந்த 17 பேர்களில் சிலர் யார் யார் தெரியுமா?

1) திரு. சித்தார்த்த வரதராஜன் இந்துப் பத்திரிகை ஆசிரியர்.
2) நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் (ஓய்வு பெற்ற நீதிபதி)
3) திரு. கிருஷ்ணமூர்த்தி (தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)
4) செல்வி பத்மா சுப்ரமணியம் (பரத நாட்டியக்காரர்)
இவர்கள் அத்தனைப் பேருமே அசல் அக்கிரகார வாசிகள்தான் என்று சொல்லித் தான் தெரிய வேண்டுமோ!
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் செயற்குழுவிற்கு (சிண்டி கேட்டிற்கு) 12 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இப்படி பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற போக்குத்தான் தலை விரித்தாடுகிறது.

அதே நேரத்தில் வெளி மாநிலங்களில் உருவாக்கப் படும் மத்தியப் பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் அங்கெல்லாம் உண்டா? அப்படியிருந்தால் அம்மாநிலத்தவர் அதனை அனுமதிப் பதும் இல்லை.

ஏமாந்த கோணகிரியாக தமிழர்கள்தான் இருந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதில் தலையிட்டு, மத்திய பல்கலைக் கழகங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்க வழி செய்யப்பட வேண்டும். பணி நியமனங்களிலும் குறிப்பிட்ட  சதவிகிதமாவது அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட உத்தரவாதம் தேவை! தேவை!!


நன்றி:விடுதலை நாளிதழ்

Friday, November 2, 2012

தமிழர்களும் - தீபாவளியும்



தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.
சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.
அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடி யில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்கு வதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து  விட்டாராம்.
அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக் குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண் டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.
நரகாசூரன், விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்ன புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக் காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழி வானது நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காள விரிகுடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவ மானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப் பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர் களை, தாசிமக்கள், மடையர்கள், கண் டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லு வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமை களான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ் காரர்களுக்குச் சுரணை இல்லாவிட் டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப் பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந் தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தி யும், மனவேதனையும் படுவது உண்மை யானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர் கள் தீபாவளி கொண்டாடுவார்களா?
(விடுதலை) குடிஅரசு - கட்டுரை மறுவெளியீடு - 31.10.1937
நன்றி:விடுதலை வலைப்பூ