Monday, October 29, 2012

உடல் நலனுக்கு ஒத்து வராத பழக்கங்கள்

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள் :

1. காலை உணவைத் தவிர்த்தல்: காலை உணவு சாப்பிடாதவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதன் விளைவாக மூளைக்குச் செல்ல வேண்டிய சக்திகள் முழுமையாக சென்றடையாமல் மூளைச் சிதைவு ஏற்படும். எனவே காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுக.
2. அதிகமாக உண்ணுதல்: வாய் ருசிக்காக அதிகமாகவும் அடிக்கடியும் உணவை உள்ளே தள்ளுகிறவர்கள் உண்டு. இதன் விளைவாக மூளைக்கு சுத்த ரத்தம் செல்லும் குழாய்கள் தடிமனாகி மூளையின் செயல் திறன் குறையும் நிலை உருவாகும். ஆகவே தான் அளவோடு உண்ணுதல் ஆரோக்கியத்தின் தலைவாசலாகிறது.
3. புகைபிடித்தல்: மூளையின் பல பாகங்கள் சுருங்கி இறுதியில் அல்சீமர் நோய் உண்டாகக் காரணமாக அமையும். நுரையீரல் கேடு, நாக்கின் சுவை மொட்டுகள் அழிவு உள்ளிட்ட இதர பல பாதிப்புகள் இலவச இணைப்பு.
4. அதிக சர்க்கரை உண்ணுதல்: அதிக அளவு சர்க்கரை உட்கொண்டால் உணவில் உள்ள மாவுச் சத்தும் மற்ற சத்துகளும் ரத்தத்தில் சேராமல் தடுக்கப்பட்டு சத்துக் குறைபாடு ஏற்படும். அது மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
5. காற்று மாசுபடுதல்: நமது உடலில் அதிக அளவு ஆக்ஸிஜன் உட்கொள்ளும் பாகம் மூளையே. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் முனைப்பு குன்றுகிறது.
6. தூக்கமின்மை: தூக்கம் மூளைக்குத் தேவையான நல்ல ஓய்வு. அதிக நேரம் தூக்கமின்மை மூளை அணுக்கள் அழிவதை வேகப்படுத்து கிறது. ஆகவே, அனாவசியமாக அதிக நேரம் தூங்குவது எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடோ, அந்த அளவுக்கு உரிய நேரம் உறங்காமல் விடுவதும் கேடுதான்.
7. தலைவரை போர்த்தித் தூங்குவது: தலைவரை போர்த்தி தூங்குவதால், போர்வைக்குள், நம் மூச்சிலிருந்து வெளியாகும் கார்பன்---_டை ஆக்ஸைடு வாயு அடர்த்தி அதிகரித்து, ஆக்ஸிஜனின் அடர்த்தி குறைகிறது. ஆக்ஸிஜன் குறைகிறபோது அது மூளையைத்தான் பாதிக்கிறது. ஆகவே கழுத்து வரையில் போர்த்திக் கொண்டு படுப்பதே நல்லது.
8. உடல் நலிவின்போது மூளைக்கு அதிக வேலை: உடம்பு சரியில்லாதபோது அதிகம் வேலை செய்வது, படிப்பது, எழுதுவது மூளையின் செயல் திறனையும், இறுதியில் மூளையையே பாதிக்கும்.
9. சிந்திப்பதைக் குறைத்துக் கொள்வது: நடத்தல், ஓடுதல், நீந்துதல், விளையாடுதல், பளு தூக்குதல் போன்ற பல உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். மூளைக்கு சரியான பயிற்சி சிந்திப்பது தான். மூளையை செயல்படத் தூண்டும் சிந்தனைகள் குறைவது, மூளை சுருங்குவதில் முடியும்.
10. அறிவாகப் பேசுவது: வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்து, அறிவு சார்ந்த பேச்சில் ஈடுபடுவது மூளையின் திறனை வளர்க்கப் பயன்படும்.
கல்லீரல் பாதிப்பிற்கான முக்கிய காரணங்கள்:
(1) தாமதமாக உறங்கச் சென்று தாமதமாக விழித்தெழுவது.
2) காலையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.
3) மிக அதிக அளவு உணவு உட்கொள்வது.
4) காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது.
5) அதிக அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது.
6) அதிகப்படியான உணவைப் பாதுகாக்கும் பொருள்களையும், உண வின் நிறமாற்றிகளையும், செயற்கையான இனிப்புகளையும் உண்பது.
7) சுகாதாரமற்ற சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவது. வறுக்கும்பொழுது ஆலிவ் ஆயில் போன்ற நல்ல சமையல் எண்ணெய் களையும்கூட மிக மிக குறைவாக பயன்படுத்த வேண்டும். களைப்பாக இருக்கும்பொழுது வறுத்த பொருள்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
8) முறுவலான உணவுகளை உண்பது கல்லீரலின் வேலை பளுவை அதிகரிக்கிறது.
9) காய்கறிகளை பச்சையாகவோ அல்லது 3-இல் 5 பாகம் வேக வைத்தும் சாப்பிட வேண்டும். வறுத்த காய்கறிகளை உடனே சாப்பிட்டுவிட வேண்டும். மீண்டும் சாப்பிடலாம் என்று வைத்திருக்கக் கூடாது.
10) அதிகமாக செலவழிக்காமல் மேற்கூறியவைகளை நாம் கடைப்பிடிக்க முடியும். நம்முடைய தினசரி வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் சரியாக மாற்றி அமைத்தாலே போதும் நமது உடல் நன்கு செரிமானம் செய்யவும், தேவையற்ற வேதியல் பொருள்களை ஒதுக்கவும், நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான நேரங்களில் சாப்பிடுவதையும் கண்டிப்பாகக் கைக் கொள்ள வேண்டும்.
உடலின் சரியான கால அளவுகள்:
இரவு 9 முதல் 11 மணி வரை: உடல் எதிர் அமைப்பிலிருந்து தேவையற்ற உடலை பாதிக்கக் கூடிய வேதியல் பொருள்களை வெளியேற்றும் நேரம். இந்த நேரத்தை ஓய்வாகவும், இசையை கேட்டும் கழிக்கலாம். வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண் தொடர்ந்து தட்டுகள் கழுவுவது அல்லது குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்ய உதவுவது போன்ற வேலைகளை இந்த நேரத்தில் செய்து வந்தால் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை:
கல்லீரலில் இருந்து உடலுக்குத் தேவையற்ற வேதியப் பொருட்கள் வெளியேற்றுவதற்கான வேலை நடைபெறும் நேரம். இந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்.
அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை:
உடலை பாதிக்கும் வேதியல் பொருள்களை கணையம் அகற்றும் நேரம். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை:
தேவையற்ற வேதியல் பொருள்களை நுரையீரல் அகற்றும் நேரம். இருமலால் அவதிப்படுவோருக்கு இந்த நேரத்தில் அதிக இருமல் வர வாய்ப்புள்ளது.
நன்றி: தீக்கதிர் வண்ணக் கதிர்

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக 
வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் மதுவையும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி,  விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர். 

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும். 


நன்றி- விடுதலை நாளிதழ்